வியாழன், 19 மே, 2016

புதிய விடியலிது


"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"


பாரதியின் சொல்லுக்கு நேர் எதிராக -
வயிற்று பசி ஆற்றாமல் தர்க்கமும், கொள்கையும் எம்மக்கள் காதில் விழாது என்ற ஒரு தோழியின் சொல் ஆயிரத்தில் ஒரு சொல் 😒 அதுவே இன்றைய யதார்த்தம்!!!

திராவிடம், ஈழம், தமிழ், 2ஜி, மீடியா வெளிச்சம், குடும்பம், தற்பெருமை,  தன்-பிரச்சினை, சாதி-மதம் இதை வைத்தே அரசியல் நடக்கிறது பல கட்சிகளில்...
அவர்கள் அரசியல் மக்களை சென்றடைவது நடவாத
காரியம் என்பதே தமிழக தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தும்
கசப்பான உண்மை!!

தோற்ற தலைவர்களும், தொன்டர்களும் தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திப்பதை விட்டு விட்டு மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்வியலை உணருங்கள்...
முதலில் மாற வேண்டியது நீங்கள்தான் அரசியல் தலைவர்களே!!!

மாற்றம் என்னவேன்று நீங்கள் கண்டுபிடியுங்கள் பின் மக்களிடம் அதை எப்படி கொண்டுசெல்வதேன சிந்தியுங்கள்!!  செயல்படுங்கள்!!

பண படை பலமிருந்தும் நாற்காலியைப் பிடிக்க இயலாமல் இருக்கும் 60 வயது இளைஞர் முயலும் போது....
60 ஆண்டு அரசியலை கரைத்துக் குடித்து, 97 வயதில் நாற்காலியில் அமரராக ஒருவர் முயலும் போது...
மொத்தமே 20 வருட அரசியல் அனுபவமில்லாத ஒருவர் 2 வருட உழைப்பில் பிரதமராக ஆகும்பொழுது...
அரிசியில் ஆரம்பித்து இலவசத்தில் மக்களை 10 வருடங்கள் கட்டுக்குள் வைத்திருக்க ஒருவரால் முடியும் பொழுது...
இந்த நாட்டில் இந்த மக்களால் எதுவும் சாத்தியமே!!

நோக்கத்தை சாதி, மொழி, இனமென குறுக்காதீர்... யாதையும் ஊராக்கி யாவர் சொல்வதையும் காதில் அல்ல மனதில் இருத்துங்கள்!!

நோக்கம் மக்கள் சேவையாக இருக்கும் பொழுது, தேர்தல்கள் மைல்கற்களாக மட்டுமே இருக்க வேண்டும்,
நாற்காலி ஒரு கருவி மட்டுமே அது மட்டுமே ஒரு கருவியல்ல..

சமூக அரசியல் கட்டமைப்பே முற்றிலும் கோனலாக இருக்குமிடத்தில் மக்களை குறை கூறாமல், பழி போடாமல்....
தொடர்ந்து அவர்களை தரம் உயர்த்துவதெப்படி என சிந்தியுங்கள்!!

மக்களின் அறியாமையை போக்க உழையுங்கள்..
வெள்ளத்தில் மீட்பராய் தெருவில் இறங்கி கைகொடுத்து..... தேர்தல் சனநாயகத்தில் நம்பிக்கை இல்லாது தள்ளி நின்ற அந்த இளைஞர்களை மீண்டும் தெருவுக்கு கொண்டுவருவதெப்படி என சிந்தியுங்கள்!!!
உங்களை விட மக்களை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும், மக்களிடம் ஒரு விசயத்தை எப்படி கொண்டு செல்வதேன அவர்களுக்கு தெரியும்!!!

நேற்று அஸ்தமனம் முடிந்த கதை, இன்றைய விடியலே நம் நம்பிக்கை!!!
வாருங்கள் தலைவர்களே!!!
இன்னும் விரைவாக!! இன்னும் பலமாக!! இன்னும் இன்னும் இன்னும் புதிதாக!!
புதியதோர் உலகம் செய்வோம் வாருங்கள்!!!

-லகி.ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக