திங்கள், 27 மே, 2013

குருட்டுதனமான முட்டாள்தனம்

ஆத்திசூடி:  சகர வருக்கம் 

"சூது விரும்பேல்"

குறள்: நடுவு நிலைமை - என் 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கனி. 



இந்த ஐ.பி.எல் 6 தொடர் விளையாட்டின் மேல் எனக்கு இருந்த பல அடிப்படைகளை நம்பிக்கைகளை தகர்த்தெறிந்துவிட்டது.

பினாமியை வைத்து சூதாடும் அணியின் உரிமையாளர், மருமகனை காப்பாற்றும் சங்கத் தலைவராகிய மாமனார்,
கம்பெனி நடத்தி சூதாடிய வீரர்கள்,
எதிர்பார்த்த நேர்மையில்லை, வாய்புகள் இல்லை, லாபமில்லை எனகூறி  வெளியேறிய சஹாரா புனே அணி,

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த எல்லா தவறுகளையும் ஒரு செய்தியாய் மட்டுமே பார்க்கும் ரசிகர்கள்...

தரம் தாழ்ந்தது விளையாட்டில் மட்டுமில்லை , ரசிகர்களின் எண்ணத்திலும்தான்..

இது சென்னைக்கு எதிராக வடக்கத்தியர்கள் நடத்தும் சதி என்பதும்..
சூதாட்டமும், பொய்யாட்டமும் (ஸ்ரீசாந்த் ஆடியது) வேறு வேறு என்று சொல்வதும்..
சம்பதிமில்லாமல் i support msd , i support raina என்று சொல்வதும்..

குருட்டுதனமான முட்டாள்தனம் ..

லஞ்சம் எப்படி ஊழலுக்கு வழி வகுக்கிறதோ  அப்படிதான் 
சூதாட்டம் தான் வீரர்களை பொய்யாட்டம்ஆட வைக்கிறது,

இங்கு ரசிர்கள் இரு வகை படுகின்றனர்..
பிரச்சினை என்னவென்றே அறிய விரும்பாதவர்கள் ஒரு வகை,
அறிந்து கொண்டே அறியாதது போல் நடிப்பவர்கள் இன்னொரு வகை..

தவறு நடந்ததாகவே இருக்கட்டும், அதை முடி மறைக்க ரசிகர்கள் ஏன்  முயலுகிறார்கள் எனத் தெரியவில்லை எனக்கு,
மாட்டிக் கொண்ட மெய்யப்பன் உங்கள் சித்தப்பனா இல்லை மாமனா ?

சென்னைக்காரர்கள் நேர்மையான விளையாட்டுக்கு பெயர் போனவர்கள் என்ற பெயரை கெடுப்பதும்..
இல்லை எந்த தவறையும் சகித்து கொள்ளாதவர்கள் என்று பெயரெடுப்பதும் ரசிகர்கள் நம் கைகளில்தான் உள்ளது..

இது சென்னைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதுபவர்கள், அதனை சரியான முறையில் களைந்தெறிய முற்படாமல் மறைக்க முயல்வது இங்கு அரசியல்வாதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது..

ஐந்து வருடங்களாக நமது நேரத்தையும் , உழைப்பையும் மிக முக்கியமாக நமது செல்வத்தையும் விழலுக்கு இளைத்த நீராக்கிவிட்டார்களே என்று கோபம் வரவில்லையா ??

நம்மை உணர்சிவயப்படுத்தி பணம் பறித்துவிட்டார்களே என்ற ஏமாற்றம் இல்லையா ?

இது எதுவுமே இல்லை எனக்கு என்று சொன்னால்..

தரம் தாழ்ந்தது விளையாட்டில் மட்டுமில்லை !!!
உங்கள் எண்ணத்திலும்தான் !!!

ஆழ்ந்த வருத்ததுடனும் கடும் கோபத்துடனும் 

-ல.கி.ரா 


 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக